எமது உத்தியோகபூர்வ வலைப்பதிவிற்கு வருகை தந்த உங்களை அன்புடன் வரவேற்கின்றேன்...புது,பொலிவுடன் இணையத்தளம் உங்களை நாடி வருகிறது.

Thursday, November 5, 2009

பிரியும் போது புரியும்


என் பாசம்
புரியதவர்களுக்கு புரியும்
இந்த உயிர் மறையும் போது
அந்த பிரியம்,
என் மௌனம்
அறியாதவர்களுக்கு அறியும்
மௌனத்தின் வலிமை
நான் கண் மூடும் போது
என் கண்களின் பாசை தெரியும்
நான் கண்ணுக்கு தெரியாத போது
என் வாழ்வின் அர்த்தம் புரியும்
நான் உங்களை   விட்டு பிரியும் போது...

Sunday, November 1, 2009

ஆர்ச் மனசு

எங்கள் அறையின் தட்டச்சு மைந்தன் என்ற பட்டத்தை தனக்கு மட்டுமே உரியதாக்கி கொண்டவர்தான் "ஆர்ச் மனசு". ரொம்ப காலமாக எங்கள் அறைக்கு வரும் இவருக்கு ஒருமுறைகூட மண்டையில் கொண்டை முலைத்து யாரும் பார்த்ததில்லை.

எங்களில் பலர் முயன்று பார்த்தும் இவருக்கு கொண்டை அல்ல சில முடிகள் கூட முலைக்கவில்லை.
முகம் பார்க்காமல் நட்பு கொள்வது chat அதிலும் ஒரு படி மேலே சென்று குரல் கூட கேட்காமல் நட்பு வட்டதிற்குள் நுழைந்தவர்தான் எங்கள் ஆர்ச் மனசு.

கிரி அண்ணா...

எந்த விதமான அடை மொழியும் இல்லாமல் அன்று முதல் இன்று வரை தன் பெயரை மட்டுமே தன் அடையாளமாக சுமந்து வரும் எங்கள் கிரி அண்ணா எங்கள் அறையின் மூத்த தோழர்களில் முக்கிய தோழர் என்றே குறிப்பிடலாம்.

அண்ணா என்ற ஒற்றை மந்திர சொல்லால் இவரின் ஒட்டுமொத்த பாசத்தயும் வென்றுவிடலாம்.
அப்படிப்பட்ட பாசக்கார நண்பர் எங்கள் கிரி அண்ணா.

பல நேரங்களில் ஆழ் கடலின் அமைதியுடன் இருக்கும் எங்கள் கிரி அண்ணா மிக சில நேரங்களில் மட்டும் ஆர்பரிக்கும் அலை கடலாகவும் மாறி விடுவார்.
சத்தமில்லாமல் பல சமூக சேவைகளை செய்து வரும் இளகிய உள்ளம் படைத்தவர் எங்கள் கிரி அண்ணா.

பாலாஜி

பாலாஜி அண்ணா என்று எல்லொராலும் அன்புடன் அழைக்கபடும் இவர் ஆரம்ப காலத்தில் தன் பெயரை மட்டுமெ அடையாளமாக கொண்டவர் ஆனால் இன்றொ தன் தமிழ் ஆர்வத்தின் காரணமாக "தங்க தமிழன்" என்ற அடைமொழியை தன் அடையாள மொழியாக்கிக் கொண்டவர்.


தமிழ் ஆர்வம் மட்டுமல்லாது இசை ஆர்வமும் உள்ள எங்கள் அண்ணனுக்கு சில பல நேரங்களில் தன் முரட்டு குரலால் இனிமையான பாடல்களை பாடக்கூடியவர்(இவர் பாஷையில் சொல்ல வேண்டுமானால் கத்த கூடியவர்). இவரே எங்கள் பாலாஜி அண்ணா.

ராதா கிரிஷ்

ராதா கிரிஷ் இவரை எங்கள் அறையின் எழுத்து தோழன் என்று குறிப்பிட்டால் அது மிகையாகாது.காரணம் இவர் பல நேரங்களில் தன் குரலை ஒலித்து வைத்து கொண்டுதான் வருவார்.

சில நேரங்களில் மட்டுமே பேசினாலும் அதை அழகாக பேச கூடியவர். நம்மில் பலர் பல விஷயங்களில் நல்லவர்களாக இருப்பினும் எங்கள் ராதா கிரிஷ் உயிர் நதியான உதிரத்தயே தானமாக குடுத்து, எல்லோருக்கும் ஒரு படி மெலே நல்லவர் என்ற பட்டத்தை தட்டி சென்றுள்ளார்.

Friday, October 30, 2009

இன்றைய சிந்தனைக்கு

உனக்கு உதவி செய்தவரை மறக்காதே.உன்னை விரும்புபவரை வெறுக்காதே.உன்னை நம்பியவரை ஏமாற்றாதே.

Sona

சோனா தன் பெயருக்கு ஏற்றாற் போல் தன் குணத்திலும் இவர் தங்கம் தான். குறிகிய காலத்தில் எல்லொர் மனதையும் தன் வச படுத்திக்கொள்ளும் ஆற்றல் படைத்தவர். எல்லா விஷயங்களிளும் பொறுமை பொறுமை என்ற தாரக மந்திரத்தை கடை பிடிப்பவர். மிக குறுகிய காலமே MIC பிடித்து பேச கூடியவர் அப்படியே MIC பிடித்தாலும் பல நேரங்களில் காற்று பாஷையில் மட்டுமே பேசுபவர். இவர் பேசும் காற்று பாஷை நண்பர்களாகிய எங்களுக்கு மட்டுமெ புரியும். புதியவர்கள் பலருக்கு புரியாத ரகசிய பாஷை பேசுவாள் எங்கள் தங்க தோழி சோனா.

Shhhuhhh77

ஸ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ் இவரின் ID மட்டும்தான் இப்படி ஆனால் இவர் பேச்சு

ஒரு மடை திறந்த வெள்ளம் போலதான் இருக்கும். அந்த வெள்ளத்தில் அன்பு பாசம் கண்டிப்பு எல்லாமும் கலந்து இருக்கும். இவர் நண்பர்கள் புதியவர்கள் என்ற பாகுபாடு இல்லாமல் எல்லோரிடத்திலும் சகஜமாக பேசி பழகும் ஒரு நல்ல உள்ளம். எங்கள் அன்பு தோழி. மற்றவர்களுக்கு உபதேசிப்பதில் மிகுந்த ஆர்வம் உடையவர். மருத்துவ துறையில் இருக்கும் இவர் அந்த துறைக்கு தேவையான பல நல்ல குணங்களை தன்னுள் புதைத்து வைத்துள்ளார்.

Thursday, October 29, 2009

SWEET ANGEL

இவள் தன் பெயருக்கேத்தது போல் இனிமையான தோழி ஆவள் அதே சமயம் தன் நண்பர்களை கண்டிப்பதில் இனிமையான ராக்க்ஷசியும் ஆவாள்

சாதாரனமாக இவள் பேச மாட்டாள் ஆனால் பேச ஆரம்பித்தால் அவ்வளவு எளிதில் பேச்சை நிறுத்தவும் மாட்டால்

எங்கள் அறைக்கு வரும் நண்பர்களை உறவு முறை வைத்து (அக்கா, மாமா, அண்ணா, தங்கச்சி என்பது போல்)அழைப்பதில் இவளுக்கே முதல் இடம்.இந்த விஷயத்தில் இவளுக்கு நிகர் இவளே

llllll_number_id_llllll

இப்ரஹிம் இவரை பற்றி சொல்ல வேண்டுமானால் இவர் தயிரியமான ஒரு பயந்த சுபாவம் உடையவர். எங்கள் அறையில் ஏதாவது Game என்றால் தயிரியமாக மைக் பிடித்து திட்டுவார் அதே சமயத்தில் Game பெறிதாவது போல் தோன்றினால் உடனே அமைதி ஆகி விடுவார். இவர் எல்லோரையும் உறவு முறை (அக்கா, மாமா, அண்ணா, தங்கச்சி என்பது போல்) வைத்து அழைப்பதில் இரண்டாம் இடத்தை பிடிப்பவர். மற்றபடி சொல்ல வேண்டுமானால் மிகவும் நகைச்சுவை உணர்வு கொண்ட நன்பர்.

Wednesday, October 28, 2009

நார்சத்து, கீரைகள் அவசியம்

நார்ச்சத்து உள்ள உணவுகள் பெருங்குடலில் புற்று நோய் வராமல் தடுக்கும். கோதுமை, சோளம், கேழ்வரகு, கம்பு முதலியன நார்ச்சத்துள்ள உணவுப் பொருட்களில் அடங்கும். கீரைகளில் கால்சியம், சோடியம், க்ளோரைன் எனப்படும் உலோகச்சத்து அதிகம் உண்டு.


கீரையில் சக்கரை கிடையாது ஆகவே நீரிழவு நோயாளிகளுக்கும் இது உகந்தது. பூண்டும் மிகவும் நல்லது.

கூடிய வரையில் ஆரோக்கிய உணவுப்பழக்கம் மேற்கொள்ளுதல் வியாதிகளை வர விடாமல் தடுக்கும். 

வியாதி வந்த பின் அதற்கேற்ற உணவுகளை கட்டுப்பாட்டுடன் சாப்பிடுவதைக் காட்டிலும், வருவதற்கு முன் ஆரோக்கியமான உணவுகளை உண்பதே சிறந்தது.

இழப்பு...

உனக்காக அனைத்தையும் இழந்தேன்
ஆனால்
நீ யாருக்காக என்னை இழந்தாய்?

நினைவு...



உன்னை மறக்க நினைத்தால் கூட

உன்னையே நினைக்க வேண்டி இருக்கிறது
இது தான் அன்பா

Saturday, October 10, 2009

இன்றைய சிந்தனைக்கு

உலகத்திற்கு வேண்டுமென்றால் நீங்கள் ஒரு ஆளாக இருக்கலாம்; ஆனால் யாராவது ஒருவருக்கு. நீங்களே உலகமாக இருக்கலாம்

Thursday, October 8, 2009

நட்பு


நண்பர்கள் பிறந்த நாளை

மறப்பது தவறு இல்லை
நண்பர்களுடன் இருந்த நாட்களை
மறந்து விடுவது தான் தவறு

வருத்தம்


பூ வாங்கி தரவில்லையே என்ற

வருத்தம் உனக்கு - நீ
நேசித்த பூக்கள் பூக்கவில்லையே
 என்ற வருத்தம் எனக்கு ...

அறியா மானிடரே


நட்பிற்க்கும், காதலிற்கும் வேறுபாடு

அறியாத மானிடரே கேளீர்
நட்பு என்பது இரு மனங்களின் சேர்க்கை
காதல் என்பது இரு உயிர்களின் சேர்க்கை
பிரிந்த நட்பு பல பசுமையான உணர்வுகள் சொல்லும்

பிரிந்த காதல் பலரை மடித்துச்செல்லும்
நட்பின் வழியில் காதல்வரின் அது போலி
காதலின் வழியில் நட்புவரின் அது விதி

நான் அறியா என் தோழன்!


விழி நோக்கி சிரித்த
தோழன் இல்லை....
அருகில் அமர்ந்து
தேற்றியவனும் இல்லை...
ஆபத்தில் வந்து
உதவியவனும் இல்லை..
கேளியாய் என்னை
வாய் பேசி சண்டை
போட்டவனும் இல்லை...
நீ யாரென்று நான்
அறியவும் இல்லை...
உன்னிடம் பகிராத
விசயங்கள் இல்லை...
இருப்பினும்
இப் பிரபஞ்சத்தில் நான்
நட்பு கொள்ள உன்னைத் தவிர
யாரும் இல்லை................

Saturday, October 3, 2009

எங்கே..



வசித்த நாடு எங்கே...
விரித்த பாய் எங்கே..
தெலைந்த வசந்தம் எங்கே..
துடிப்பான ரத்தம் எங்கே..
தேடிய சொந்தம் எங்கே..
தொலைந்து போன சொர்க்கம் எங்கே..
இதமான நட்பு எங்கே..
அன்புள்ள இதயம் எங்கே..
இனிமை தந்த குரல் எங்கே..
வசந்தம் தந்த பாடல் எங்கே..
இப்போ….நீ…..தான் எங்கே....?

எப்படி சொன்னாய்




 தோழி நலம் விசாரித்த போது

  நலமாய் இருக்கிறேன் என்று
 எப்படி சொன்னாய் - என்னை
 நீ பிரிந்து சென்ற பின்பும் கூட....

இமைக‌ள்

                                                         
     விழிக்கும் ச‌க்தி இல்லை என்றால்   இமைக‌ள் கூட‌ இடம்பெயர்ந்து செல்லும்

Thursday, October 1, 2009

கனவு


       
 கனவு காண யாரும்
     உறங்கப் போவதில்லை
நான் மட்டும்தான்
பகல் கனவு கண்டு
கொண்டு இருக்கிறேன்
நான் தூங்குவதாக

வாழ்க்கை


 
வாழ்க்கை ஒரு
பட்டாம்பூச்சி மாதிரி.......

லேசா பிடிச்சா

பறந்து விடும்!

இறுக்கி பிடிச்சா

இறந்து விடும்

Wednesday, September 30, 2009

நினைவுகள்...





     முள்ளைப் போல
     நினைவுகளையும்
     நினைவால்தான் எடுக்க வேண்டும்..

முள் எடுக்கும் வரை வலிக்கும்
நினைவு எடுத்த பிறகும் வலிக்கும்..

’நீ’

 ’நீ’எனக்கானவள் என்று நினைப்பது சரிதான்
       எனக்கே எனக்கானவள் என்று நினைப்பது தான் தவறு



’நீ’ என்னவள் என்று நினைப்பது சரிதான்
       என்னவள் மட்டுமே என்று நினைப்பது தான் தவறு


’நீ’ என்னவள் என்று விளங்கியது சரிதான்


’நீ’ என்னவென்பதை அறியாதது தவறுதான்

அம்மா



நான் பிறந்த போது அழுதேன்



அம்மா  என்று  ஆனால்


உண்மையில் அர்த்தம் தெரியாது


அம்மா" என்ற அமுத வார்த்தைக்கு


இந்நாள் வரையில்

Tuesday, September 29, 2009

காதல்



கண்கள் செய்யும் சிறு தவறுக்கு…..!


இதயம் அனுபவிக்கும் ஆயுள் தண்டனை……!!

எங்கே ’நீ’

                                                              
                                                                  
                                               காத்திருந்த நேரமெல்லாம்


  வரவில்லை

  வந்தாய்

  விலகிப் போகும் நேரத்தில்

Sunday, September 27, 2009

இன்றைய சிந்தனைக்கு

மகான் போல் நீ வாழ வேண்டும் என்றில்லை, மனசாட்சிப்படி வாழ்ந்தால் போதும்.

அன்பு




















அன்பு இல்லாமல் பேசும்


ஆயிரம் வார்த்தைகளை விட


உரிமையோடு திட்டும்


ஒரு வார்த்தையில் இருப்பது தான்


உண்மையான அன்பு

நட்பு



இதயம் கொடுத்து உயிரை

பறிக்கும் காதலை விட

உயிரை கொடுத்து

இதயம்
கேட்கும் நட்பே போதும்

Tuesday, September 22, 2009

தினமும் முட்டை சாப்பிடுபவரா நீங்கள்?

அன்றாடம் ஒரு முட்டையை சாப்பிடுவோர் பலர் உண்டு. தினமும் ஒரு முட்டை சாப்பிடுபவர்களுக்கு சர்க்கரை நோய் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

ஏற்கனவே சர்க்கரை நோய் உள்ளவர்கள் வாரத்திற்கு 2 முட்டை சாப்பிட்டால் கூட அது அவர்களின் சர்க்கரை நோய் பாதிப்பை மேலும் தீவிரப்படுத்தும் என்றும் ஆஸ்திரேலியாவில் நடத்தப்பட்ட அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

தினமும் ஒரு முட்டை உண்பது சர்க்கரை நோயாளிகளின் உடல்நலத்திற்கு சிறந்தது என்று அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வைப் பின்பற்றி ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

அதில் டைப் 2 டயபடிஸ் நோய் ஏற்படும் வாய்ப்பும், இரத்தத்தில் உள்ள குளுகோஸ் அளவை பராமரிப்பதிலும் முட்டையின் பங்கு உள்ளதாகத் தெரிய வந்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் நடத்தப்பட்ட புதிய ஆய்வின்படி தினமும் முட்டை சாப்பிடுபவர்களுக்கு சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புகள் 60 விழுக்காடு அதிகம் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிலும் பெண்கள் தினமும் ஒரு முட்டை அல்லது வாரத்திற்கு 7-க்கும் அதிகமான அளவு முட்டைகளைச் சாப்பிட்டால், சர்க்கரை நோய் ஏற்படும் வாய்ப்புகள் 77 விழுக்காடு இருப்பதாகத் தெரிய வந்துள்ளது.

அதே நேரத்தில் வாரத்திற்கு ஒரு முட்டை சாப்பிடலாம் என்றும், இதனால் பெரிய அளவில் உடல்நலத்திற்கு தீங்கு ஏற்படாது என்றும் ஆய்வை மேற்கொண்ட டாக்டர் மைக்கேல் தெரிவித்துள்ளார்.

ஆண்கள் மற்றும் பெண்கள் 57 ஆயிரம் பேரிடம் முட்டை சாப்பிடும் பழக்கம் குறித்து சுமார் 20 ஆண்டுகள் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

இணையத்தி்ல் Yahoo, Hotmail, AOL போன்ற தளங்களில் மின்னஞ்சல்கள் வைத்திருக்கும் நண்பர்கள் அவதானம்

இன்று காலை மைக்கிரோசாப்ட் நிறுவனத்தினரிடமிருந்தும், நோட்ரான் நிறுவனத்திடரிடமிருந்தும் நேரடி மின்னஞ்சல்கள் ஒரு குறிப்பிட்ட தலைப்பிலான மின்னஞ்சல்களை திறக்க வேண்டாம் என்ற எச்சரிக்கையுடன் வந்ததாக அறியப்பட்டுகின்றது.



இதில் எந்தளவு தூரம் உண்மை என்று தெரியவில்லை. எனினும் தற்கால நிகழ்வுகளை வைத்துப் பார்க்கும் போது எதற்கும் எச்சரிக்கையாக இருப்பதில் தவறில்லை என்றே தோன்றுகின்றது.

உங்களுக்கு (Power Point presentation) 'Life is beautiful.' என்ற தலைப்பில் ஏதாவது ஒரு் மின்னஞ்சல் வந்தால் தயவு செய்து எந்த ஒரு காரணத்தை முன்னிட்டும் திறக்க வேண்டாம். உடனேயே அதை அழித்துவிடவும்.

அல்லாமல் இந்த மடல் தாங்கிவரும் இணைப்பை நீங்கள் திறப்பீர்களானால் உடனடியாக உங்கள் கணனியின் திரையில் பின் வரும் செய்தி வருகிறதாம்.
'It is too late now, your life is no longer beautiful.'
அந்தக் கணமே உங்கள் கணனி செயல்பாடற்றுப் போய்விடுவதுடன், உங்களுக்கு அம் மடலை அனுப்பிய கயவர்களால் உங்கள் கணனியை அவர்கள் இருந்த இடத்திலிருந்து இயக்கவும், உங்களுடைய கடவுச் சொற்களைக் கைப்பற்றவும் முடியும்.
இது ஒரு வகையான புதிய வைரஸ் சென்ற சனிக்கிழமை மதியத்திலிருந்து இணையத்தில் உலாவத் தொடங்கியுள்ளதாகத் தெரிகின்றது.

AOL நிறுவனத்தினர் ஏற்கனவே இச் செய்தியை உறுதிப்படுத்தியுள்ளதாகவும் இந்த வைரஸுக்கு மாற்று செயல் முறை எதுவும் தற்போதைக்கு கைவசம் இல்லையெனறும் சொல்கிறார்கள். இந்த வைரசை உருவாக்கிய கயவன் தன்னை 'life owner.' மடல்களில் குறிப்பிட்டுள்ளதாகவும் சொல்லப்படுகின்றது.

Saturday, September 19, 2009

செல்போனில் அதிக நேரம் பேசுகிறீர்களா?

செல்போனில் அதிக நேரம் பேசுவதால், உடல் நலத்திற்கு பல பாதிப்புகள் ஏற்படும் என்று தெரிய வந்துள்ளது. இணைய தளம் ஒன்றில் வெளியான தகவலின் அடிப்படையில், செல்போன்களில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சு மிகக் குறைந்த திறன் கொண்டதுதான் என்றாலும், அதிக நேரம் காதுகளில் வைத்து பேசிக் கொண்டிருப்பதால் ஏராளமான உபாதைகள் ஏற்படுவதாகத் தெரிய வந்துள்ளது.



செல்போன்களில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சினால், மூளை நரம்புகள் பாதிக்கப்படக் கூடிய வாய்ப்புகள் உள்ளதாகவும் அந்த தகவல் தெரிவிக்கிறது. தவிர எண்ணற்ற உடல் நலம் தொடர்பான நோய்களும் ஏற்படுவதாக ஆய்வு ஒன்றை மேற்கோள்காட்டி அந்த தகவல் கூறுகிறது.

மேலும் கர்ப்பிணிப் பெண்கள் அதிக நேரம் செல்போனில் உரையாடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொதுவாக கர்ப்பிணிப் பெண்களுக்கு கதிர்வீச்சு தாக்குதல் இல்லாதவாறு பாதுகாத்துக் கொள்தல் அவசியம். அதில் செல்போன் கதிர்வீச்சும் அடங்கும் என்று குறிப்பிட்டுள்ள அந்த தகவல், தேவைப்பட்டால் மட்டும் கர்ப்பிணிப் பெண்கள் செல்போன்களில் பேசலாம் என்று தெரிவிக்கிறது.

அடிக்கடி பாப்கான் சாப்பிடுகிறீர்களா? : நுரையீரல் பாதிப்பு வரலாம் உஷார்!

பாப்கானுக்கு சுவை தர பயன்படுத்தப்படும் ரசாயனத்தால், நுரையீரல் பாதிக்கப்படலாம்' என, அமெரிக்க நிபுணர்கள் கண்டு பிடித்துள்ளனர். அமெரிக்காவின் தேசிய சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார அறிவியல் நிறுவனத்தைச் சேர்ந்த நிபுணர்கள் கூறியுள்ளதாவது:



பாப்கானுக்கு வெண்ணெய்யின் சுவையை தர, "டையாசெடில்' என்ற செயற்கையான நறுமணப் பொருள் பயன்படுத்தப்படுகிறது.

இந்த ரசாயனத்தால், "லிம்போசைடிக் பிரான்கியோலிட்டீஸ்' என்ற நுரையீரல் நோய் பாதிப்பு ஏற்படும். குறிப்பாக, மைக்ரோவேவ் பாப்கான் பேக்கேஜிங் யூனிட்டுகளில் பணியாற்றும் தொழிலாளர்களும், "டையாசெடில்' ரசாயனம் கலக்கப்பட்ட பாப்கானை அடிக்கடி சாப்பிட்டவர்களும், நுரையீரல் பாதிப்புக்கு ஆளாகியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் பாப்கான் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள, "கான்ஆக்ரா புட்ஸ்' நிறுவனம் மற்றும் "வீவர் பாப்கான் கம்பெனி' போன்றவையும், தற்போது "டையாசெடில்' ரசாயனம் பயன்படுத்துவதை நிறுத்தி விட்டதாக தெரிவித்துள்ளன. "டையாசெடில்' பயன் படுத்தும் போது உருவாகும் ஆவியை, எலி ஒன்றை மூன்று மாதங்கள் சுவாசிக்கச் செய்ததன் மூலம், அதற்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டது கண்டறியப்பட்டது. வெண்ணெய்யின் நறுமண சுவை கொண்ட பாப்கானை தினமும் சாப்பிட்ட ஒருவர், உயிருக்கு ஆபத்தான நோயால் பாதிக்கப்பட்டதை அடுத்து, இது தொடர்பான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, "டையா செடில்' ரசாயனம் ஆபத்தை உண்டாக்கக் கூடியது என கண்டறியப்பட்டது.இவ்வாறு நிபுணர்கள் கூறியுள்ளனர்.

வாங்கி பாத்

தேவையான பொருட்கள்: பச்சரிசி- 1 கப்(வேக வைத்து ஆறியது) தொகுதி 1 (தாளிக்க) கடுகு- 1/2 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு- 1 டீஸ்பூன் உடைத்த முந்திரிப்பருப்பு- 10 எண்ணெய்- 1 டீஸ்பூன்
தொகுதி 2 கத்திரிக்காய்- 1 கப் வெங்காயம்- 1 (பொடியாக அரிந்தது) எண்ணெய்- 2 டீஸ்பூன் தொகுதி 3 உப்பு- 1 1/2 டீஸ்பூன் மஞ்சள் பொடி- 1/4 டீஸ்பூன் தொகுதி 4 கொத்தமல்லி தழை- 1 டேபிள் ஸ்பூன் (அரிந்தது) எண்ணெய்- 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சம் சாறு- 1 டேபிள் ஸ்பூன் செய்முறை: மைக்ரொவேவ் பாத்திரத்தில் தொகுதி 1 ல் உள்ள பொருட்களை போட்டு முழுவதும் மூடாமல் மைக்ரொ ஹையில் 2 நிமிடங்கள் வைக்கவும். அத்தோடு தொகுதி 2 ல் உள்ள பொருட்களையும் சேர்த்து மூடாமல் மைக்ரொ ஹையில் 6 நிமிடங்கள் வைக்கவும். மத்தியில் 1 முறை கலந்து விடவும். இவற்றுடன் தொகுதி 3 ல் உள்ள பொருட்களையும் சமைத்த சாதத்தையும் சேர்த்து கலந்து மூடாமல் மைக்ரொ ஹையில் 3 நிமிடங்கள் வைக்கவும். அதில் தொகுதி 4 ல் உள்ள பொருட்களையும் கலந்து மூடாமல் மைக்ரொ ஹையில் 1 நிமிடம் வைக்கவும். 3 நிமிடங்கள் கழித்து பரிமாறவும். கிடைக்கும் அளவு: 4 நபருக்கு.

Wednesday, September 16, 2009

ஹைதராபாத் பிரியாணி

தேவையான பொருட்கள்: பாசுமதி அரிசி- 1 கப் தொகுதி 1 வெங்காயம்- 2 (நீளவாக்கில் அரிந்தது) உரித்த பூண்டு- 6 பல் எண்ணெய்- 1 டீஸ்பூன்
தொகுதி 2 சதுரங்களாக அரிந்த காய்கறிகளின் கலவை- 2 கப் (உருளை. கிழங்கு, காரட், பட்டாணி, பீன்ஸ், காலிப்ளவர் மற்றும் பல) தொகுதி 3 (அரைத்து கொள்ளவும்) முந்திரிப்பருப்பு- 10 சின்ன வெங்காயம்- 7 இஞ்சி- 1/2 அங்குலத் துண்டு ப.மிளகாய்- 6 (மேற்சொன்ன பொருட்களை வறுத்து 1 கட்டு கொத்தமல்லியுடன் சேர்த்து அரைக்கவும்) தொகுதி 4 (கலந்து வைக்கவும்) பட்டை- 1 அங்குலத் துண்டு இலவங்கம், ஏலக்காய்- தலா 2 கெட்டி தயிர்- 1 கப் (கடைந்தது) தண்ணீர்- 1 கப் உப்பு- 2 டீஸ்பூன் புதினா இலை, கொத்தமல்லிதழை- தேவையான அளவு (பொடியாக அரிந்தது) மற்ற பொருட்கள் எண்ணெய்- 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சம் சாறு- 1 பழம் செய்முறை: அரிசியை கழுவி 10 நிமிடங்கள் ஊற வைக்கவும். மைக்ரொவேவ் பாத்திரத்தில் தொகுதி 1 ல் கொடுக்கபட்டுள்ள பொருட்களை கலந்து மூடி மைக்ரொ ஹையில் 4 நிமிடங்கள் வைக்கவும். தொகுதி 2 ல் கொடுத்துள்ள பொருட்களையும் கலந்து 2 டேபிள் ஸ்பூன் தண்ணீர் தெளித்து மூடி மைக்ரொ ஹையில் 5 நிமிடங்கள் வைக்கவும். மத்தியில் 1 முறை கலந்து விடவும். இதனுடன் தொகுதி 3 மற்றும் 4 ல் கொடுக்கபட்டுள்ள பொருட்களை கலந்து ஊறவைத்த அரிசியையும் சேர்த்து நன்றாக கலந்து மைக்ரொ ஹையில் 15 நிமிடங்கள் வைக்கவும். மூடியை கவனமாக திறந்து எண்ணெய் சேர்த்து மூடாமல் மைக்ரொ ஹையில் 2 நிமிடங்கள் வைக்கவும். எலுமிச்சை சாற்றை நன்றாக கலந்து 3 நிமிடம் கழித்து பரிமாறவும். கிடைக்கும் அளவு: 4 நபருக்கு.

வீடியோ டவுன்லோடுகள் - எச்சரிக்கை தேவை

தற்போது ஆன்லைன் நேயர்களின் மிகச் சிறந்த பொழுதுபோக்கு யூ டியூப் உள்ளிட்ட பல இணையதளங்களிலிருந்து வீடியோ கிளிப்பிங்குகளை டவுன்லோடு செய்வதுதான். இதனால் கணினிகளின் பாதுகாப்பிற்கு பல ஆபத்துகள் நேர்வதாக கணினி பாதுகாப்பு ஆய்வு அறிக்கை ஒன்று எச்சரிக்கை விடுத்துள்ளது.


யூ டியூப் மற்றும் பிற நட்புறவு இணையதளங்களில் ஏகப்பட்ட வீடியோக்கள் உள்ளன. அவற்றை பார்த்து ரசிப்பது மற்றும் டவுன்லோடு செய்து நண்பர்களுக்கு அனுப்புவது என்பது ஆன்லைன் நேயர்களிடையே தற்போது பிரபலமடைந்து வரும் பழக்க வழக்கம். உரை ரீதியிலான பொருளடக்கங்களை விட வீடியோ கிளிப்பிங்குகளை பார்ப்பது, டவுன்லோடு செய்வது, அவற்றை பல நண்பர்களுக்கு அனுப்புவது தினசரி நடவடிக்கையாகிவிட்டது.

ஆனால் இவற்றை டவுன்லோடு செய்யும்போது வைரஸ் கிருமி சமிக்ஞை உள்ள குறியீடையும் நாம் சேர்த்தே டவுன்லோடு செய்து விடுகிறோம் என்று கூறுகிறது அந்த ஆய்வறிக்கை. இந்த வைரஸ் சமிக்ஞை உங்கள் கணிகளை அதன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறது. உங்கள் நிதி நிலைமை, வங்கிக் கணக்கு, உங்கள் ஆன்லைன் வங்கி மற்றும் நிதி நடவடிக்கைகள் குறித்த தகவல்களை அப்படியே திருடிச் செல்கிறது.

ஜியார்ஜியா தொழில்நுட்ப தகவல் நிறுவனம் இது குறித்து கூறுகையில், தற்போதைய வெப் 2.0 தொழில்நுட்பம் பல்வேறு வகையான டவுன் லோடுகளுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது, இதன் மூலம் பயனாளர் அனுபவம் விரிவடைகிறது எனினும் திருட்டு சமிக்ஞைகளையும் சேர்த்தே நாம் டவுன்லோடு செய்வதும் நடக்கிறது என்று எச்சரித்துள்ளது.

ஃபிளாஷ் மீடியா ஃபைல் ஃபார்மேட்டுகள் அதிக பிரபலமடைந்து வரும் இக்காலக் கட்டங்களில், ஒரு மீடியா ஃபைலை டவுன்லோடு செய்யும்போதே ஹேக்கர்களிடம் கணினிகளை ஒப்படைப்பதும் நடைபெறுகிறது.

இணைய தள பயனாளர்களின் தினசரி ஆன்லைன் நடவடிக்கைகளில் மோசடி நிபுணர்களின் போலி இணைப்புகளும் நுழைந்து கொண்டிருக்கிறது. யூ டியூப் வீடியோ ஒன்றில் அல்லது இன்ஸ்டன்ட் மெசேஜிங் ஸ்ட்ரிங்கின் முடிவில், எக்செல் ஸ்ப்ரெட் ஷீட்டில் என்று ஹேக்கர்கள் மோசடி இணைப்புகளை வைத்திருப்பார்கள் என்று செக்யூர் கம்ப்யூடிங் நிறுவனத்தின் மூத்த அதிகாரி பால் ஜட்ஜ் என்பவர் கூறியுள்ளார்

புளி உப்புமா

தேவையான பொருட்கள்:

தொகுதி 1

எண்ணெய்- 1 டீஸ்பூன்

கடுகு- 1/2 டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு- 1 டீஸ்பூன்

கடலைப் பருப்பு- 1 டீஸ்பூன்










தொகுதி 2

வெங்காயம்- 2

(பொடியாக அரிந்தது)

தொகுதி 3

அரிசி ரவா- 1 கப்

நீர்த்த புளிக் கரைசல்- 3 கப்

(எலுமிச்சை பழம் அளவு புளியில் கரைத்தது)

உப்பு- 1 1/2 டீஸ்பூன்

ஜவ்வரிசி (ஊறவைத்தது)- 1 டீஸ்பூன் (விருப்பபட்டால்)

தொகுதி 4

எண்ணெய்- 2 டேபிள் ஸ்பூன்

கொத்தமல்லித் தழை- 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

மைக்ரொவேவ் பாத்திரத்தில் தொகுதி 1 ல் கொடுக்கபட்டுள்ள பொருட்களை எடுத்துக் கொண்டு பாதி மூடி மைக்ரொ ஹையில் 3 நிமிடங்கள் வைக்கவும்.

தொகுதி 2 ல் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களையும் சேர்த்து பாதி மூடி மைக்ரொ ஹையில் 3 நிமிடங்கள் வைக்கவும்.

தொகுதி 3 ல் கொடுக்கபட்டுள்ள பொருட்களையும் அத்தோடு நன்றாக கலக்கி மூடாமல் மைக்ரொ ஹையில் 3 நிமிடங்கள் வைக்கவும். மத்தியில் 2 முறை கலந்து விடவும்.

தொகுதி 4 ல் கொடுக்கபட்டுள்ள பொருட்களை கலந்து மூடாமல் மைக்ரொ ஹையில் 2 2 நிமிடங்கள் வைக்கவும்.

2 நிமிடங்கள் கழித்து பரிமாறவும்.

கிடைக்கும் அளவு: 4 நபருக்கு
         

Sunday, September 13, 2009

அறிமுக பதிவு

ஒரு அறிமுகப் பதிவோடு உங்கள் எல்லோரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. முதலில் எல்லொருக்கும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியூம் சமாதானமும் உண்டாகட்டும். இப்படி ஒரு வலை தளம் தொடங்க வேண்டும் என்று பல நாட்களாக ஒரு எண்ணம் என் மனதில் இருந்தது. இதை தொடங்க முதல் காரணம் எங்கள் நட்பு.... இந்த வலை தலத்தின் வழியாக எங்கள் நட்பு பற்றியும் நண்பர்கள் பற்றியும் பலர் அரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணமும் ஒரு முக்கிய காரணம்... TN 6 எங்கள் அணைவரின் வாழ்கையிலும் ஒரு அங்கமாகவே மாறி விட்டது என்று சொன்னால் அது மிகையாகது. நண்பர்களாகிய நாங்கள் சொந்த குடும்பங்களை பல மைல் தூரத்துக்கு அப்பால் விடுத்து இங்கு தணிமையில் வாடும் பொது... Yahoo chat எங்கள் நட்பையே, குடும்பம் போல மாற்றி விட்டது. எங்கள் நண்பர்கள் அனைவருக்கும் துக்கம் அல்லது சந்தோஷம், கோவம் அல்லது அழுகை என்று எப்படிபட்ட உணர்ச்சியாக இருந்தாலும்... அதை நாங்கள் பகிர்ந்து கொள்வது எங்கள் TN 6ல் தான். இங்கு நாங்கள் நண்பர்கள் மட்டும் அல்ல அனைவரும் குடும்ப உருப்பினர்கலே. இனி எங்கள் அறை தோழர்களை பற்றி பார்போம்... கொஞ்சம் நீங்களும் தான் பாருங்களேன்...

இன்றைய சிந்தனைக்கு

வெற்றியால் மகிழ்ச்சி மட்டும் தன் கிடைக்கும் ...
       
ஆனால் தோல்வியால் நல்ல அனுபவமும் அதனால் பக்குவமும்
கிடைக்கும் …  அனுபவம்தான் வாழ்கையில் வெற்றி பெற உதவும்

கொழுப்பா? மியூசிக் கேளுங்க...கேட்டுக்கிட்டே இருங்க.

உடலில் உள்ள கொழுப்பைக் கரைக்கவும், இதய பாதுகாப்பிற்கும் இசை கேட்பது நல்ல பலனைத் தரும் என்று தெரிய வந்துள்ளது.இதய நோயாளிகள் தங்களுக்குப் பிடித்தமான இசையை தினமும் சுமார் அரை மணி நேரம் கேட்டால், அவர்களின் மனம் ரிலாக்ஸ் ஆவதுடன் உடல்ரீதியிலான ஆரோக்கியமும் ஏற்படுவதாக லாஸ் ஏஞ்சல்ஸில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

இசையை ரசிப்பதால் இரத்த நாளங்கள் விரிவடைவதுடன் சுத்தப்படுத்தப்படுவதாகவும் அந்த ஆய்வு கூறுகிறது.

இசை கேட்பதால், இதய பாதிப்பின்றி இருக்கவும், கொழுப்பின் அளவு குறையவும் வாய்ப்பு உள்ளதாக அந்த ஆய்வு கூறுகிறது.

இசை கேட்கும் சிகிச்சை முறையை அமெரிக்காவில் சில நோயாளிகளுக்கு அளித்து பரிசோதித்ததாகவும், இதனை பிரிட்டன் நிபுணர்கள் வரவேற்றுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

இசையைக் கேட்டு ரசிப்பதால் மூளை நரம்புகளில் நைட்ரிக் ஆக்ஸைடு வெளிப்படுவதாகவும், இது இரத்தம் உறைவதைத் தடுப்பதுடன் கொழுப்பு சேர்வதையும் கரைப்பதாகத் தெரிய வந்துள்ளது.

மனித உடலில் இசையால் ஏற்படும் விளைவுகள் தொடர்பான ஆராய்ச்சியின் ஒருபகுதியாக இது அமைந்துள்ளது. 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சிம்பொனி இசை மனநலத்தை மேம்படுத்தக் கூடியது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஞாபக மறதியைப் போக்கும் மாத்திரை

பள்ளி, கல்லூரி தேர்வுகளைப் பற்றிக் கவலையா? அல்லது குறிப்பிட்ட தொலைபேசி அல்லது செல்பேசி எண்களை மறந்து விடுகிறீர்களா? இனி கவலை வேண்டாம். ஞாபக சக்தியை பெருக்கி, நினைவாற்றலை மேம்படுத்துவதற்கு புதிதாக மாத்திரை கண்டுபிடிக்கப்பட்டு விட்டது.

பரீட்சைக்கு தேவையானவற்றை மறுநினைவூட்டுவதற்கும், முக்கிய தினங்களை மறந்து விடுவதை போக்குவதற்கும் மாத்திரை ஒன்றை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

அல்ஸிமெர் நோயாளிகளுக்காக கண்டறியப்பட்டுள்ள இந்த மாத்திரையானது, அடுத்த சில ஆண்டுகளில் நினைவாற்றல் திறனுக்காகவும் விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயோதிகத்தால் ஏற்படும் ஞாபக மறதியைப் போக்கும் வகையில் அமெரிக்க மருந்து நிறுவனங்க்ள் இணைந்து இந்த மாத்திரையை தயாரித்துள்ளன.

மூளையை மேம்படுத்துவதற்கு பயன்படுத்தப்படும் மாத்திரைகள் தற்போது பிரிட்டனில் ஆரோக்கியமான உடல்நிலையுடன் இருப்பவர்களால் பயன்படுத்தப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Saturday, September 12, 2009

பாஸ்வேர்டுக்கு புதிய வழி


தட்டுங்கள் திறக்கப்படும் என்னும் எளிய விதி இன்டெர் நெட்டுக்கு பொருந்துவதில்லை. அங்கே கேளுங்கள் சொல்லப்படும் என்பதே கோலோச்சுகிறது.

அதாவது, இணைய வாசிகள் தட்டும்போது திறக்காமல் முதலில் கேட்பதற்கு பதில் சொல்லுங்கள் என்று அநேக இணைய தளங்கள் நிபந்தனை விதிக்கின்றன.

பொதுவாக சந்தாதாரர் களுக்கு மட்டுமே என சொல்லும் தளங்களும், பல்வேறு காரணங்களுக் காக உங்க ளைப்பற்றிய விவரங்கள் தெரிந்த பிறகே உள்ளே அனுமதிப்போம் என்று கராராக இருக்கும் கரங்களும் தான் இப்படி கேள்வி கேட்டு பதில் சொல்ல கட்டாயப் படுத்துகின்றன.

இதுபோன்ற தளங் களை பயன் படுத்த அவர்கள் கேட்கும் விவரங் களையெல்லாம் கொடுத்து விட்டு கூடவே இ-மெயில் முகவரியையும் சமர்ப்பித்து நமக்கான பயன்பாட்டு பெயர் அதாவது யூசர் நேம் மற்றும் அதனை இயக்க கூடிய பாஸ்வேர்டு அதாவது கடவுச் சொல் ஆகியவற்றை பெற்றுக்கொள்ள வேண்டும்.

அதன் பிறகு அந்த தளத்தை எப்போது பயன் படுத்த வேண்டும் என்றாலும், பயன்பாட்டு பெயரை சமர்ப்பித்து கடவுச்சொல்லை தெரிவித்தால் மட்டுமே உள்ளே நுழைய முடியும்.ஒரே ஒரு தளம் என்றால், இந்த முறையை பின்பற்றுவதில் எந்த சங்கடமும் இல்லை. ஆனால் பிரச்சனை என்னவென்றால் பல்வேறு தளங்களில் அவற்றின் சேவையை பயன்படுத்த இப்படி பல விதமான பயன்பாட்டு பெயரையும், கடவுச் சொல்லையும் உருவாக்கிக்கொள்ள வேண்டி இருக்கிறது.இ-காமர்ஸ் தளங்கள், இ-மெயில் சேவை தளங்கள், பிரத்யேக ஆன் லைன் இதழ்கள், அரசு தளங்கள் என்று பலவற்றில் இப்படி தனித்தனியே நமக்கான அடையாளத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டி இருக்கிறது.ஒவ்வொரு முறையும் அடையா ளத்தை உருவாக்க நேரத்தை செலவிட வேண்டியிருப்ப தோடு, பலவித அடையாளங்களை நிர்வகிப்பதும் சிக்கலாகிவிடுகிறது. கடவுச்சொல்லை மறந்து விடும் அபாயம் இருக்கிறது. இதன் காரணமாகவே இணையவாசிகளின் தகவல் தேடும் அனுபவம் சுமை மிக்கதாக மாறிவிடுகிறது.இதற்கு தீர்வாக வந்திருக்கும் புதிய சேவைதான் ‘ப்ரீ யுவர் ஐடி’.‘ஓபன் ஐடி டாட் நெட்’ இந்த சேவையை வழங்கி வருகிறது. இந்த தளத்தில் உங்களைப்பற்றிய விவரங்களை சமர்ப்பித்து (ஒரே) ஒரு கடவுச்சொல்லை பெற்றுக் கொண்டீர்கள் என்றால் போதுமானது.

வேறு எந்த இணைய தளத்தை பயன்படுத்தும்போதும், உங்களைப் பற்றிய விவரங்கள் கேட்கப்பட்டது என்றால், ஓபன் ஐடி அடையாளத்தை சமர்ப்பித்தீர்கள் என்றால் போதுமானது.

உங்களைப் பற்றிய விவரங்களை ஓபன் ஐடி வழங்கி நீங்கள் தளத்தின் உள்ளே செல்ல கதவைத் திறந்து விடும். இதன் மூலம் கட்டண சேவை போன்ற தளங்கள் ஒவ்வொன்றுக் கும் தனித்தனி அடையாளத்தை உருவாக்கிக்கொண்டிருக்க வேண் டியதில்லை.

ஒரு கதவைத் திறந்தால், ஓராயிரம் கதவுகள் திறக்கும் என்பதுபோல, இந்த ஒரே ஒரு கடவுச் சொல்லை வைத்துக்கொண்டு இன்டெர்நெட் முழுவதும் உலா வரலாம். ஏற்கனவே மைக்ரோசாப்ட் நிறுவனம் வழங்கிய பாஸ்வேர்ட் சேவை போன்றதே இது. அதைவிட மேம்பட்டதாக இது இருக்கிறது என ஓபன் ஐடி மார்தட்டிக் கொள்கிறது.

மகளிருக்கான இணையதளம்: யாகூ அறிமுகம்


மகளிரை கவரும் வகையில் அவர்களுக்கு தேவையான அம்சங்களை உள்ளடக்கிய, ஷைன் (Shine) என்ற புதிய இணையதளத்தை யாகூ நிறுவனம் இன்று அறிமுகப்படுத்தி உள்ளது.

நியூயார்க்கில் நடந்த அறிமுக விழாவில் செய்தியாளர்களிடம் பேசிய யாகூ லைப் ஸ்டைல் பிரிவின் துணைத்தலைவர் அமி லோரியோ, 'ஷைன்' இணையதளம், 25 முதல் 54 வயது பெண்களுக்காக பிரத்யேகமாக துவக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.ஆடையலங்காரம், அழகுக்குறிப்புகள், ஆரோக்கியமான வாழ்க்கைக்கு மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள், குழந்தை வளர்ப்பு, காதல் டிப்ஸ், சிக்கன வழிமுறைகள், உணவு தயாரிப்பு, வீட்டு பராமரிப்பு, ஜோதிடம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் மகளிருக்கு தேவையான ஆலோசனைகளை ஷைன் இணையதளம் வழங்கும் என யாகூ கூறியுள்ளது.இந்த இணையதளத்திற்கு தேவையான தகவல்கள், கட்டுரைகளை பெற, ஹீயார்ஸ்ட் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் ரோடேல் ஆகிய நிறுவனங்களுடன் யாகூ கூட்டு மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கோபம் கொல்லும்


பட் பட்டென எதற்கெடுத்தாலும் கோபப்படும் ஆசாமிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கும் புதிய ஆராய்ச்சி ஒன்றை இங்கிலாந்து மருத்துவ ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ளனர். பெரும்பாலும் மனிதனுடைய கோபம் வெளிப்படும் இடம் குடும்பம் என்றாலும் அது வீடுகளில் வெடிக்கும் வரை உள்ளுக்குள்ளேயே வெகு நேரம் காத்திருக்கிறது.கோபம் அதிகரிக்கும் போது மனித உடலில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்கின்றன.

இதயத் துடிப்பு அதிகரிக்கிறது, குருதி அழுத்தம் கூடுகிறது, பல்வேறு வேதியல் மாற்றங்கள் நிகழ்கின்றன, உடலின் தன்மையே நிலை தடுமாறுகிறது.நல்ல உடல் நலத்துடன் இருப்பவர்களுக்கு, கோபம் மட்டும் அடிக்கடி வருகிறது என வைத்துக் கொள்வோம்.

அப்படிப்பட்டவர்களுக்கு மாரடைப்பு வந்து மரணமடையும் வாய்ப்பு 19 விழுக்காடு அதிகரிக்கிறதாம்.அப்படியானால் ஆரோக்கியம் சிறப்பாக இல்லையென்றால் ? இந்த விழுக்காடு இருபத்து ஐந்து என எகிறுகிறதாம்.நல்ல திடகாத்திரம், ஒழுங்கான உடற்பயிற்சி, சத்தான உணவுப் பழக்கம் எல்லாம் இருந்தாலும் கோபத்தைக் கட்டுப் படுத்த முடியவில்லையெனில் அதோ கதி தான் என்பதையே இந்த ஆராய்ச்சி வெளிப்படுத்துகிறது.

கோபப்படும் போது உடலில் மன அழுத்தத்தை அதிகரிக்கச் செய்யும் கார்சிசால் எனும் வேதியல் பொருள் அளவுக்கு அதிகமாகச் சுரந்து விடுகிறது. இதுவும் மாரடைப்பு வாய்ப்பை அதிகப்படுத்தும் ஒரு காரணி என இதற்கான மருத்துவ விளக்கத்தை எளிமையாய் தெரிவிக்கிறார் ஆராய்ச்சியின் தலைவர் யோய்சி சிந்தா.இதைக் குறித்து அமெரிக்காவில் நிகழ்த்தப்பட்ட இன்னொரு ஆராய்ச்சி கோபம் எப்படி இதயத்திலுள்ள மின் அமைப்பைப் பாதிக்கிறது

எனும் கோணத்தில் நடந்தது.அந்த ஆய்வின் முடிவு, கோபம் இதயத்தின் மின் நிலையில் ஒரு நிலையற்ற தன்மையை உருவாக்கி விடுகிறது என நீள்கிறது. இவை மாரடைப்புக்குக் காரணமாகி விடுகின்றன. அமெரிக்காவில் மட்டும் ஆண்டுக்கு 40000 சடுதி மரணங்கள் நிகழ்கின்றன என்பது குறிப்பிடத் தக்கது.

உலகக் கோப்பை கிரிக்கெட் போன்ற பெரும்பான்மையான மக்கள் பார்க்கும் விளையாட்டுகள் இந்த நிலையற்ற மின் அதிர்வுச் சிக்கலை பல கோடி இதயங்களில் உருவாக்கி விடுகின்றன. இப்படி ஒரு சில தேசங்களை ஒட்டு மொத்தமாக ஒரு இறுக்கமான நிலைக்குள் தள்ளும் போது மாரடைப்புகள் அதிகரிக்கின்றன என தெரிவிக்கிறார் அமெரிக்க மருத்துவர் லாம்பெர்ட்.கோபம் !! உறவுகளைக் கொல்வதுடன், தன்னையும் கொல்லும் என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

எனவே விடவேண்டியவை மது, புகை மட்டுமல்ல கோபமும் கூடத் தான் என்பதைக் கவனத்தில் கொள்வோம்

 உன்னால் ஆரம்பித்தேன் உன்னால் முடிவுரக்கூடாது என்று நினைக்கிறேன் நண்பியே நீ இன்று எனிலிருந்து வெகு தூரமெனினும் என் கண்களுக்குள் என் நினைவுகளுக்குள் வாழ்ந்துகொண்டுதான்
கணினியின்கண்டுபிடிப்புக்கு பின்உலகமே என் விரல் நுனியில் எனமார் தட்டுகிறாயே !ஒரு நாற்காலியில் சிறைபடுகிறதுஉன் வாழ்கை என்பதை உணர்வது எப்போது ?

Friday, September 11, 2009

இன்றைய சிந்தனைக்கு!

மாற்றம் ஒன்று மட்டுமே மாற்றம்மில்லாதது

புளு-ரே மற்றும் எச்.டி–டிவிடிக்களை தயாரிக்க இலவச மென்பொருள்

சிடி மற்றும் டிவிடிக்களைத் தயாரிக்க அதற்கான சாப்ட்வேர் அப்ளிகேஷன்களைத் தேடுகிறீர்களா? அதுவும் இலவசமாக! மேலும் கூடுதல் வசதிகளாக புளு ரே மற்றும் எச்.டி–டிவிடிக்களையும் தயாரிக்கும் வசதி கொண்டதாகத் தேடுகிறீர்களா! ஆஹா! இத்தனையும் இலவசமா என்று வியப்படையாதீர்கள். சிடி பர்னர் எக்ஸ்பி என்ற புரோகிராம் இதைத்தான் செய்கிறது. உங்கள் சிஸ்டம் ஒத்துழைத்தா புளு ரே மற்றும் எச்.டி –டிவிடிக்களையும் தயாரித்து வழங்குகிறது.

இதன் லேட்டஸ்ட் பதிப்பு (4.2.4) ஆக கிடைக்கிறது. இதனை டவுண்லோட் செய்து நேரடியாக உங்கள் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்தி டலாம். மற்ற சிடி பர்னர்களைக் காட்டிலும் இது நவீன வசதிகளைக் கொண்டுள்ளது. இதில் எந்தவிதமான விளம்பர புரோகிராம்கள் அல்லது கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்களோ இணைந்து வருவதில்லை.

கம்ப்யூட்டரில் இதனை இன்ஸ்டால் செய்து இயக்கியவுடன் தொடக்க திரையில் ஐந்து பட்டன்கள் உள்ளன. அவை Data Disc, Audi Disc, Burn ISO image, Copy Disc and Erase Disc. ஆகியனவற்றினைத் தேர்ந்தெடுக்கத் தரப்பட்டிருக்கும் இன்டர்பேஸ் ஆகும். இதில் எது உங்கள் வேலைக்குச் சரியான பட்டனோ அதனைக் கிளிக் செய்திடவும். எடுத்துக் காட்டாக நீங்கள் டேட்டா பைல்களைக் கொண்டு சிடி உருவாக்கப் போகிறீர்கள் என்றால் இதனைத் தேர்ந்தெடுக்க வேண்டும். உடன் கிடைக்கும் விண்டோவில் மேலும் இரு பட்டன்கள் உள்ள ஆப்ஷன் திரை கிடைக்கும். பின் அதன் வழியே சென்றால் எளிதாக சிடி பர்ன் செய்யலாம்.

இந்த புரோகிராமினை விண் டோஸ் 2000 ல் தொடங்கி இன்றைய விஸ் டா ஆப்ப ரேட்டிங் சிஸ்டங்கள் வரையில் இயக்கலாம். இதனை இன்ஸ்டால் செய்திடும் முன் உங்கள் சிஸ்டத்தில் .net framework இருப்பதனை உறுதி செய்திடுங்கள். இது இல்லை என்றால் இந்த புரோகிராம் சரியாகச் செயல்படுவதில்லை.

உங்களுடைய மீடியாபிளேயரை இணைய உலாவியிலிருந்தே இயக்குவது எப்படி?

நீங்கள் இணையத்தில் அதிகம் வலம் வருபவரா? அதுவும் பாடல்களை ஒலிக்க விட்டே இணையத்தில் இருப்பவரா? மேற்கண்ட கேள்விகளுக்கு உங்களின் பதில் “ஆம்” என்றால் உங்களுக்காகவே இருக்கிறது ஒரு இலவச மென்பொருள். அதன் பெயர் Foxy tunes.


 இது Internet Explorer, Mozilla Firefox உடன் வேலைசெய்கிறது. இதை உங்கள் கணினியில் நிறுவிவிட்டால் உங்களது மீடியாபிளேயரை இணைய உலாவில் இருந்துகொண்டே இயக்கலாம். உங்களிடம் இருக்கும் பாடல்களை உங்களது மீடியா பிளேயரில் பாடவிடவும், பின்னர் மீடியா பிளேயரை மினிமைஸ் செய்துவிட்டு இணைய உலாவியில் இருக்கும் Foxy Tunes மூலமாக இயக்கிக்கொள்ளலாம்.. இதை பயர்பாக்ஸில் உபயோகித்தால் யூ‍‍டியூப் தளத்தின் playlist கூட கையாள‌முடியும் என்பது கூடுதல் சிறப்பு.

உங்கள் சருமத்தை அழகாக்கும் உணவுகள்

சிலருக்கு செயற்கையான கீரீம் பயன்படுத்தி உடல் அழகாக்க பிடிக்காது அவங்களுக்கு இதோ சில உணவுகள் மூலமே அழகாக்க சில உணவு குறிப்புகள்



உடலின் வெளி அழகுக்கும், உள் ஆரோக்கியத்துக்கும் மிகவும் முக்கியம் கீரை எல்லா வைகயான கீரையும் அதிகம் சாப்பிடலாம். குறிப்பாக வெந்தயக்கீரை, பசலைக்கீரை,முருங்கை கீரைகளில் அதிகமாக இரும்பு சத்து மற்றும் ஜிங்க் சத்து இருக்கு. இந்த கீரைகளுடன் விட்டமீன் சி சத்துள்ள உணவுகள் சேர்த்தும் சாப்பிடும் பொழுது இன்னும் அதிகமான சத்துக்கள் கிடைக்கும் இதன் மூலம் கண்களுக்கு கருவளையம் குறையும், முகத்தில் பருக்கள் வருவது குறையும்.

வருண்ட சருமம் உள்ளவர்கள்:

அதிக வருண்ட சருமம் உள்ளவர்கள் உணவில் கொழுப்பு நிறைந்த உணவுகள் (உடல் நலனுக்கு ஏற்ப) உணவில் சேர்த்துக்கொள்ளவும், ஆலீவ் ஆயீல், எள் எண்ணெய், கடலை எண்ணெய், நெய் போன்றவைகளை உணவில் சேர்த்துக்கொள்ளவும்.

தக்காளி:

ஆண்டி ஆகிஸிடெண்ட்களான விட்டமின் ஏ மற்றும் விட்டமின் சி சத்துக்கள் நிறைந்த பழம். விட்டமின் சி தோலுக்கு எலாஸ்டிக் தன்மை தருகிறது. சருமம் கறுப்பதும் தடுக்கும்.

இளமையில் முதுமை:


இளமையிலே சிலருக்கு முதுமையான தோற்றம் இருக்கும் அவங்க ஒரு கைபிடியளவு ஸ்ட்ராபெர்ரி அல்லது 3 நெல்லிக்காய் சாப்பிடவும். தேவையான சத்துக்கள் கிடைக்கும்.

மீன்:

மீனிலுள்ள ஓமேகா-3 என்ற பொருள் சரும சொல்களை புதுபிக்கும். சருமத்தை பளபளக்க செய்யும். வாரத்துக்கு 3 நாள் மீன் சாப்பிடுவது நல்லது. மீன் சாப்பிடாதவர்கள் மீன் மாத்திரை சாப்பிடலாம்.

முகப்பருக்களை தடுக்க:

சோயபீன்ஸ்யில் இருக்கும் ஈஸ்ட்ரோஜன் முகப்பருக்கள் வராமல் தடுக்கிறது. வாரத்துக்கு 3 நாள் இதனை உணவில் சேர்த்துக்கொண்டால் சருமம் புதுப் பொலிவுடனும், ஈரபசையுடனும் இருக்கும்.

கேரட்:

இதிலுள்ள பீட்டா க்ரோட்டின் சருமத்தை பொலிவுடன் வைக்கும். ஆரஞ்சு, ஆப்ரிகாட், பப்பாளி, பூசணி, மாம்பழம் சாப்பிட்டாலும் சருமம் பொலிவுடன் இருக்கும்.

டல் லடிக்கும் முகம்:

சிலருக்கு முகத்தில் பரு இல்லாமல் சுத்தமாக இருக்கும் இருந்தாலும் ஏதோ முகத்தில் டல்லாக தெரியும். அவங்க அதிகமாக தண்ணீர் குடிக்கனும். அப்பொழுது தான் சருமம் புத்துணர்ச்சி பெற்று ஈரபசையுடன் இருக்கும்.. குறைந்தது ஒரு நாளுக்கு 9 கப் தண்ணீர் குடித்தால் முகம் நன்றாக இருக்கும்.

பிடித்த பாடலை பாடி அதை வைத்து கண்டுபிடித்து டவுன் லோடு செய்யலாம்

நமக்கு பிடித்த பாடலை எங்கேயோ கேட்டு இருப்போம் அது எந்த படம் போன்ற விபரங்கள் தெரியாது , அதனை கண்டறிந்து download போடவேண்டும்.


இதை எளிமையாக்க நாம் அந்த பாடலை பாடினால் அதன் மூலம் கண்டறிந்து பெறமுடியும் . நாம் குறைந்தது பத்து வினாடிகள் பாடினால் போதும்.

எப்படி என்று பார்ப்போம் முதலில் www.midomi.com இதை கிளிக் செய்து அந்த இணைய தளம் செல்லுங்கள் அங்குள்ள பட்டன் கிளிக் செய்து மைக்ரோ போன் தேர்வை ஓகே செய்து பாடுங்கள் பிறகு stop button கிளிக் செய்து விடுங்கள் போதும் . இந்த இணையதளம் நீங்கள் பாடியதை வைத்தே தேடி உங்களுக்கு தேவையான பாடலின் முழு விபரமும் கொடுத்துவிடும் .

தமிழ் பாடல்களை விட மேற்கத்திய பாடல்கள் மிக சரியாக கிடைக்கும் . முயன்று பாருங்கள் .

Thursday, September 10, 2009

மோர்களி

தேவையான பொருட்கள்; தொகுதி 1 எண்ணெய்- 1 டீஸ்பூன் கடுகு- 1/2 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு- 1 டீஸ்பூன் கடலைப் பருப்பு- 1 டீஸ்பூன்
தொகுதி 2 ப.மிளகாய்- 5 அரைக்கவும் வெங்காயம்- 2 பொடியாக அரியவும் தொகுதி 3 அரிசி மாவு- 1 கப் கடைந்த தயிர்- 3 கப் உப்பு- 1 1/2 டீஸ்பூன் (மூன்றையும் கட்டி இல்லாமல் கரைத்து கொள்ளவும்) தொகுதி 4 எண்ணெய்- 2 டேபிள் ஸ்பூன் கொத்தமல்லித் தழை- 1 டேபிள் ஸ்பூன் செய்முறை: மைக்ரொவேவ் பாத்திரத்தில் தொகுதி 1 ல் கொடுக்கபட்டுள்ள பொருட்களை எடுத்துக் கொண்டு பாதி மூடி மைக்ரொ ஹையில் 3 நிமிடங்கள் வைக்கவும். தொகுதி 2 ல் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களையும் சேர்த்து பாதி மூடி மைக்ரொ ஹையில் 3 நிமிடங்கள் வைக்கவும். தொகுதி 3 ல் கொடுக்கபட்டுள்ள பொருட்களையும் சேர்த்து மூடாமல் மைக்ரொ ஹையில் 7 நிமிடங்கள் வைக்கவும். மத்தியில் ஒருமுறை கலந்து விடவும். தொகுதி 4 ல் கொடுக்கபட்டுள்ள பொருட்களை சேர்த்து மூடாமல் மைக்ரொ ஹையில் 2 நிமிடங்கள் வைக்கவும். எண்ணெய் தடவிய தட்டில் கொட்டி நன்கு சமன் செய்து லேசாக ஆறியதும் 2 அங்குல சதுர துண்டுகளாக வெட்டி பரிமாறவும்.

திடீர் ரசம்

தொகுதி 1 நீர்த்த புளிக் கரைசல்- 3 கப் கறிவேப்பிலை- சிறிதளவு உப்பு- ருசிக்கேற்ப
தொகுதி 2 துவரம் பருப்பு- 1 டேபிள் ஸ்பூன் சிகப்பு மிளகாய்- 4 மிளகு- சிறிதளவு சீரகம்- 1 டீஸ்பூன் வெந்தயம்- 1 டீஸ்பூன் பெருங்காயம்- சிறிதளவு செய்முறை: மைக்ரொவேவ் பாத்திரத்தில் தொகுதி 2 ல் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை எடுத்து கொண்டு மூடி மைக்ரொவேவ் ஹையில் 3நிமிடங்கள் வைக்கவும். பிறகு மிக்ஸியில் பொடியாக்கி கொள்ளவும். பொடித்ததை அதே பாத்திரத்தில் போட்டு தொகுதி 1 ல் கொடுக்கபட்டுள்ள பொருட்களையும் கலந்து மைக்ரொ ஹையில் 5 நிமிடங்கள் வைக்கவும். 3 நிமிடங்கள் கழித்து சூடான சாதத்துடன் பரிமாறவும். (கிடைக்கும் அளவு : 5 நபருக்கு.)

தக்காளி சூப்

தேவையான பொருட்கள்: தொகுதி 1 தக்காளி - 1/2 கிலோ வெங்காயம் - 1 இஞ்சி - 1/2 அங்குலத் துண்டு
தொகுதி 2 உப்பு - தேவையான அளவு சர்க்கரை- 2 டீஸ்பூன் மிளகு பொடி- ருசிக்கேற்ப செய்முறை; மைக்ரொவேவ் பாத்திரத்தில், தொகுதி 1 ல் கொடுக்கபட்டுள்ள பொருட்களுடன் 1/4 கப் தண்ணீர் சேர்த்து மூடி மைக்ரொ ஹையில் 7 நிமிடங்கள் வைக்கவும். நன்கு ஆறியதும் இஞ்சித் துண்டை வெளியெ எறிந்து விடவும். மீதமுள்ள பொருட்களை மிக்ஸியில் அரைத்து கொண்டு வேண்டிய அளவு தண்ணீர் சேர்த்து வடிகட்டவும். பிறகு ருசிக்கேற்ப தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து கொள்ளவும். இதனுடன் தொகுதி 2 ல் கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து மூடாமல் மைக்ரோ ஹையில் 5 நிமிடங்கள் வைக்கவும். சூப் கிண்ணத்தில் விட்டு பொரித்த bread துண்டுகளுடன் சூடாக பரிமாரவும். பயனுள்ள குறிப்பு: சூப் கெட்டியாக வேண்டுமானால் சிறிது மக்காச் சோள மாவை கரைத்து சூடாக்கினால் கெட்டியாகி விடும். (கிடைக்கும் அளவு : 4 நபருக்கு.)

Wednesday, September 9, 2009

உன்னைச் சுற்றி இருப்போரை

சிரிக்க வைத்தே

பழக்கப் பட்ட உனக்கு

எப்படி மனது வந்தது..

என்னை மட்டும் அழ வைக்க…!!!

Sunday, September 6, 2009

கூகிள் ஆன்லைன் கோப்புகளை தரவிறக்க எளிய வழி

நண்பர்களே நாம் கூகிளில் உள்ள கூகிள் டாக்ஸ் உபயோகப்படுத்தியிருப்போம். அந்த ஆன்லைன் Google docs நிறைய கோப்புகள் சேமித்திருப்போம். அப்படி சேமித்த அனைத்து கோப்புகளையும் தரவிறக்க இந்த மென்பொருள் உபயோகப்படும்.


இந்த மென்பொருளை தரவிறக்கி சாதராண மென்பொருள் போல நிறுவிக் கொள்ளுங்கள்.
பின்னர் அந்த மென்பொருளை இயக்கி அதில் User Name உங்கள் கூகிள் நுழைவுச் சொல்லை கொடுக்கவும்.

பின்னர் Password என்ற இடத்தில் உங்கள் (Password) கடவுச்சொல்லை கொடுக்கவும்.

பின்னர் உங்கள் கணிணியில் எந்த இடத்தில் சேமிக்க விரும்புகிறீர்களோ அந்த இடத்தை தேர்வு செய்து கொள்ளுங்கள்.

பின்னர் Exec என்ற பட்டனை கிளிக் செய்தால் உங்கள் Google Docs அனைத்தும் தரவிறக்கி கொடுத்து விடும்.

இந்த மென்பொருள் மிகவும் நம்பகத்தன்மையானது. அது மட்டுமில்லாமல் புதிய பதிப்பு வந்தால் புதுப்பித்துக் கொள்ளும் வசதி. அத்துடன் கூகிளின் நிறுவனத்தில் இருந்து வந்தது என்றால் கேட்கவும் வேண்டுமா என்ன?

               மென்பொருள் - GDocBackup-Ver.0.2.0.0

புகைப்படம் இல்லாம வலை உலாவியை திறக்க

நண்பர்களே நாம் வீட்டில் சில நேரங்களில் சில பதிவுகளை படிக்கும் போது யாராவது வந்து பார்த்துவிடுவார்களோ என்ற பயத்துடனே படித்துக் கொண்டிருப்பார்கள். அப்படி பார்த்து விட்டால் உடனே அந்த விண்டோவை மூடி விடுவார்கள் (அல்லது) கணிணியை அணைத்துவிடுவார்கள். அதற்குப் பதில் ஒரே கிளிக்கில் வேற டெஸ்க்டாப் திறந்தால் எப்படி இருக்கும்.


இந்த மென்பொருளின் பெயர் - டபுள் டெஸ்க்டாப் - DoubleDesktop 1.1
மென்பொருளின் அளவு - 205 கேபி மட்டுமே
புகைப்படங்கள் இல்லாமல் வலைத்தளங்கள் திறக்க
சில நேரங்கள் சில வலைத்தளங்களை திறக்கும் போது மிகவும் மெதுவாக திறக்கும் அதிக நேரம் எடுத்துக் கொள்ளும். இதை தவிர்க்க உங்களுக்கு அந்த வலைத்தளத்தில் உள்ள புகைப்படங்கள் திறக்க வேண்டாம் என்று நினைத்தால் சுலபமாக செய்யலாம். அத்துடன் டயல் அப் இணைய இணைப்பு உபயோகபடுத்துபவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம்.

நெருப்பு நரி உலாவி உபயோகிக்கும் பயனாளர்கள் கீழே உள்ள வழிமுறையை பின்பற்றவும்.
நெருப்பு நரி உலாவி திறந்து அதில் Tools கிளிக் செய்து பின்னர் அதில் Options தேர்வு செய்து அதில் Content என்ற டேபை தேர்வு செய்யுங்கள். அதில் Load Images Automatically என்பதில் டிக் மார்க் எடுத்து விடுங்கள். பின்னர் OK தேர்வு செய்து வெளியேறுங்கள்.

இண்டெர்நெட் எக்ஸ்ப்ளோரர் உபயோகிப்பவர்கள் இண்டெர்நெட் எக்ஸ்ப்ளோரர் 6 ஆம் பதிப்புக்கு மேல்

இண்டெர்நெட் எக்ஸ்ப்ளோரர் திறந்து அதில் Tools கிளிக் செய்து அதனுள் Internet Options தேர்வு செய்து பின்னர் Advanced Tab என்பதனை தேர்வு செய்யுங்கள் கீழே கட்டத்தில் Multimedia என்பதற்கு கீழே Show Pictures அதன் நேரே பாக்ஸில் டிக் மார்க் எடுத்து விடுங்கள். பின்னர் OK தேர்வு செய்து வெளியேறுங்கள்.
ஆப்பிள் சபாரி உலாவி உபயோகிப்பவர்கள்

சபாரி திறந்து வைத்துக் கொள்ளுங்கள் மெனு கிளிக் செய்து அதில் Preferences தேர்வு செய்யுங்கள் பின்னர் மேலே Appearance என்பதனை கிளிக் செய்யுங்கள் அதில் Display images when the page opens. என்பதனை டிக் எடுத்து விடுங்கள் முடிந்தது பின்னரொ OK தேர்வு செய்து வெளியேறுங்கள்.

இனி உங்கள் உலாவியில் எந்த வலைத்தளம் திறந்தாலும் படங்கள் மட்டும் தோன்றாது.

அறிவை அதிகரிக்கும் மீன் உணவுகள்!

நீங்கள் புத்திசாலியாக மாற வேண்டுமா? அப்படி என்றால் மீன் சாப்பிடுங்கள் என்கிறார்கள் ஸ்வீடன் ஆராய்ச்சியாளர்கள். சுமார் 5 ஆயிரம் பேரை வைத்து இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. அவர்களின் உணவு பழக்க வழக்கங்களை ஆய்வு செய்தார்கள்.
ஆய்வு முடிவில், வாரத்திற்கு ஒன்றும் மேற்பட்ட முறை மீன் உணவு உட்கொண்டவர்கள், அதைவிட குறைவாக மீன் உட்கொண்டவர்கள் மற்றும் மீனே சாப்பிடாதவர்களைக் காட்டிலும் அதிக அறிவுடன் செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுபற்றி ஆராய்ச்சியாளர்கள் கூறும்போது, `15 வயதுக்கு மேல் மீன் உணவு அதிகம் உட்கொள்வது அறிவு வளர்ச்சிக்கு உதவுகிறது என்பது எங்கள் ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. வாரத்திற்கு ஒன்றிற்கு மேற்பட்ட முறை மீன் உணவை எடுத்துக்கொள்பவர்கள்தான் இந்த பலனை பெற முடியும். அதனால், மீன் உணவுகளை தவிர்க்காமல் அடிக்கடி எடுத்துக்கொள்வது நல்லது' என்றனர்.