பரீட்சைக்கு தேவையானவற்றை மறுநினைவூட்டுவதற்கும், முக்கிய தினங்களை மறந்து விடுவதை போக்குவதற்கும் மாத்திரை ஒன்றை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
அல்ஸிமெர் நோயாளிகளுக்காக கண்டறியப்பட்டுள்ள இந்த மாத்திரையானது, அடுத்த சில ஆண்டுகளில் நினைவாற்றல் திறனுக்காகவும் விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயோதிகத்தால் ஏற்படும் ஞாபக மறதியைப் போக்கும் வகையில் அமெரிக்க மருந்து நிறுவனங்க்ள் இணைந்து இந்த மாத்திரையை தயாரித்துள்ளன.
மூளையை மேம்படுத்துவதற்கு பயன்படுத்தப்படும் மாத்திரைகள் தற்போது பிரிட்டனில் ஆரோக்கியமான உடல்நிலையுடன் இருப்பவர்களால் பயன்படுத்தப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment